வாதத்தைத் தணிக்க...

வாதத்தைத் தணிக்க...


ரத்த சோகை உள்ள, எப்போதும் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்பவர்களுக்கு பலம் தரும் உணவு - வெல்லம்! இவர்கள் பால், டீ, வேறு இனிப்புகள் சாப்பிடும்போது அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை விட வெல்லத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம். அதிலும் ஒரு வருடம் பழசான வெல்லம் கூடுதல் பலம் தரும்.

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும்.

கருத்துகள்