வயிற்று வலியால் துடித்தால்...

வயிற்று வலியால் துடித்தால்...
குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் நோய்களில் வயிற்று வலி முக்கியமானது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பேசும் திறன் படைத்த குழந்தைகளுக்கும் இந்நோய் சர்வ சாதாரணமாக வரலாம். வயிற்றில் உண்டாகும் ஒருவகை அமிலப் பொருள் குடலின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வில் எரிச்சலூட்டுவதால் வயிற்று வலி ஏற்படுகின்றது. சீரணக் குறைபாடுகளினால் குடலில் வாயுக்கள் அதிகமாக உற்பத்தியாவதால் வயிற்று வலி உண்டாகும். இதுதவிர வேறு ஏதாவது காரணத்தால் வயிற்றில் பாலை சீரணிக்க முடியாத நிலையிலும் வயிற்று வலி உண்டாகும்.
வயிற்று வலியால் துடிக்கும் குழந்தைகளை உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும். அதற்குமுன் குழந்தையினுடைய வயிற்றின் மீது டர்பன்டைன் எண்ணெய்யை லேசாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வலி குறைந்து குழந்தை நிம்மதியாக தூங்கும். மருத்துவரை பார்ப்பதற்கு தாமதமாகும் என்றால் ஒரு தேக்கரண்டி அளவு மில்க் ஆப் மெக்னீசியாவை நீரில் கலந்து புகட்டலாம். வயிற்று வலியினால் அவதிப்பட்ட குழந்தைக்கு சில மணி நேரம் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட வேண்டும்.
இத்தயை குழந்தைகளுக்கு கிளிசரினுடன் தண்ணீர் கலந்து எனிமா கொடுக்கலாம். அதனால் வாயுவும், மலமும் கழிந்து குழந்தைக்கு வயிற்று வலி குறையும். ஆனால் எக்காரணம் கொண்டும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பேதிக்கு மட்டும் மருந்து கொடுக்கக் கூடாது.

**********************************************************************************************

வெந்தயத்தின் மருத்துவக்குணம்
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை முதலியவைகள் போகும்.
வெந்தயம் 17கி எடுத்து 340கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட இரத்தம் பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.
நீர் வேட்கை, இளைப்புநோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்புசேர்த்து சுண்ட காய்ச்சி இறக்கிய சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.
இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை, நெய், பால் சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும் வலிமை உண்டாகும். இடுப்பு வலி தீரும்.
வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து சாப்பிட மார்புவலி, இருமல், மூலம் இவைகளைப் போக்கும்.

கருத்துகள்