மன நோயின் அறிகுறி...
சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் இது. பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது. தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்த மற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அவைகள் வேரூன்றியிருக்கும்.
சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் இது. பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது. தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்த மற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அவைகள் வேரூன்றியிருக்கும்.
நோய் வருவதற்கு முன் இவர்கள் கொண்டிருந்த குண இயல்புகளை ஆராய்ந்தால் இவர்கள் சமூக உறவுகள் மிகவும் குறை உடையனவாகவே இருந்திருக்கும் என்பது தெரிய வரும். அன்பு இல்லாதவர்களாகவும் மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமலும் வெறுப்பு கொண்டு ஒதுங்கி வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான ஈடுபாடு கொள்ளாமல். பட்டும் படாமல் இருந்திருப்பர்.