வியாழன், 29 ஜனவரி, 2015

மன நோயின் அறிகுறி...

மன நோயின் அறிகுறி...
சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் இது. பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது. தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்த மற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அவைகள் வேரூன்றியிருக்கும்.
நோய் வருவதற்கு முன் இவர்கள் கொண்டிருந்த குண இயல்புகளை ஆராய்ந்தால் இவர்கள் சமூக உறவுகள் மிகவும் குறை உடையனவாகவே இருந்திருக்கும் என்பது தெரிய வரும். அன்பு இல்லாதவர்களாகவும் மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமலும் வெறுப்பு கொண்டு ஒதுங்கி வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான ஈடுபாடு கொள்ளாமல். பட்டும் படாமல் இருந்திருப்பர்.

புதன், 28 ஜனவரி, 2015

நெஞ்சு எரிச்சலா?

நெஞ்சு எரிச்சலா?
நெஞ்சு எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண்டை வரை எரிச்சல்... காரசாரமான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக்கும் போது எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.

நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது...

நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது...
நீரிழிவு நோயாளிகள் தனியாக பயணம் செய்வது நல்லதல்ல. தனியாக பயணம் செய்யும்போது தங்களைப் பற்றி குறிப்பு அடங்கிய கார்டு ஒன்றை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். அதில் பெயர், விலாசம், டெலிபோன் எண், மருந்துகளின் பெயர், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் விலாசம் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நோயாளியுடன் செல்பவர் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளி இருக்கும் குடும்பத்தினரும் இதை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் செய்யக்கூடாத விஷயங்கள்
அதிகமான அளவு உடற்பயிற்சி செய்தல்
சரியான நேரத்துக்கு உணவு அருந்தாமை
ஊசியில் இன்சுலின் அளவை அதிகரித்தல்
மாத்திரையின் அளவில் ஏற்படும் தவறுதல்
வேறு நோய்களால், நீரிழிவு நோய்க்குரிய மாத்திரை சாப்பிட முடியாமை போன்றவைகளால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால்...
அதிக சோர்வு
கண் இருண்டு போதல்
உதடு மரத்து போகும் உணர்வு
அதிகமாக வியர்த்தல்
இதய துடிப்பு
நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்படும்.
இவ்வாறு ஏற்பட்டால், குளுக்கோஸ் கலக்கி கொடுக்க வேண்டும் அல்லது இனிப்பு சாப்பிடவேண்டும். உடனே மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும்

சிரித்தாலும் நோய் வரும்

சிரித்தாலும் நோய் வரும்
! சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாத நிலையில் சில பெண்கள் இருப்பதேன்? இது என்ன வினோத நோய்?
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதை மருத்துவ ரீதியாக, Stress Urinary Incontinence என்று கூறுவர். இதுவொரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை. வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள்.

திங்கள், 26 ஜனவரி, 2015

நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தாதீர்கள்!

நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தாதீர்கள்!
சிலருக்குத் திடீரென்று நெஞ்சு வலி வரும். வேலை செய்யும்போது, பளு தூக்கும்போது, வேகமாக நடக்கும்போது, உணவு உண்ட பின்பு இப்படி அடிக்கடி வலி தோன்றும். அநேகம் பேர் இதை வாயுத் தொல்லை என்று அவர்களாகவே ஏதோ காரணங்களைக் கூறி அலட்சியம் செய்து விடுகின்றனர்.

இளமையாகவே இருக்க இனிய மருந்து!

இளமையாகவே இருக்க இனிய மருந்து!
தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட்டில் மற்றும் வெளியிடங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இதனால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்துப் போராடலாமா? அல்லது எழுந்து ஓடலாமா? என்ற கேள்வி!
இதையே ஆங்கிலத்தில் "ஸ்ட்ரெஸ்" (STRESS) அல்லது "டென்ஷன்" என்று கூறுகிறோம். மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் மூளையிலிருந்து "பிட்யூட்டரிக்கு சடஸால்" என்ற பொருளை ரத்தத்தில் தள்ள செய்தி வருகிறது. இதன் பிறகு உடலில் உள்ள மற்ற உறுப்புகள், நிலைமையைச் சமாளிக்கத் தயாராகின்றன. "அட்ரீனல்" என்னும் ஹார்மோன் நம் நாடித் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்து நாம் மூச்சு விடுவதற்குக் கஷ்டப்படும் ஓர் நிலைமையை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் டென்ஷன் ஏற்படுத்தும் அந்த செயல் ஒன்றுமில்லாமல் மறைந்து விட்டாலும், உடலினுள் ஏற்பட்ட மாறுதல்களும் தங்கி விடுவதுண்டு. இதுவே மீண்டும் மீண்டும் நடைபெறுமேயானால் அது ரத்த அழுத்த நோயையும், நரம்புத் தளர்ச்சியையும் ஏற்படுத்தி இளமையைக் கெடுத்துவிடுகின்றன.
கவலை வேண்டாம்:

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்!

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்!
உலகில் அதிக அளவில் பெண்கள் முட்டைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டைப்பை புற்றுநோய் என்பது அறிகுறிகள் இல்லாமல் ஆளைக் கொல்லும் ஒரு நோய் ஆகும். ஆனால் இது இந்தியாவில் சற்று குறைவு என்று மருத்துவர்களின் கணிப்புகள் கூறுகின்றன. இந்த நோய் தாமதமாகத்தான் கண்டறியப்படுகிறது. அதனால் உயிர்பலிக்கு காரணமாகிவிடுகிறது.
முட்டைப்பை புற்று நோயானது முட்டைப்பையின் செல்களை பாதிக்கிறது. ஆகவே, அது எவ்வகை செல்களை பாதிக்கிறது? என்பதைப் பொறுத்தே புற்றுநோய் வகைப்படுத்தப்படுகிறது. 'எபித்லியல் ஓவரியன் கார்சீனமோ' முட்டைப்பையின் படிமச் செல்களை பாதிக்கிறது. 'ஜேர்ம் செல் கார்சீனமோ' முட்டை உருவாக்கும் செல்களை பாதிக்கிறது. 'ஸ்ட்ரோமல் கார்சீனமோ' முட்டைப்பையின் திசுக்களை பாதிப்பதுடன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் ஹார்மோன்களை உருவாக்கும் செல்களையும் பாதிக்கிறது. இதில் 'எபித்லியஸ் ஓவரியன் கார்சீனமோ'தான் மிகவும் ஆபத்தான வகை! 40 வயதிற்கும் குறைவாக உள்ள பெண்கள் மத்தியில் முட்டைப்பை புற்றுநோய் குறைவாக காணப்படுகிறது. போஸ்ட் மெனோபாசல் நிலையில் உள்ள பெண்களையே இவ்வகை பாதிக்கிறது. பரம்பரை காரணமாகவும் சிலருக்கு முட்டைப்பை புற்றுநோய் ஏற்படக்கூடும். அதாவது குடும்பத்தில் பெற்றோருக்கு மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் இருப்பின் இந்த நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இதேபோல் குழந்தையில்லாதவர்கள், இளம் வயதிலேயே பூப்படைந்தவர்கள், தாமதமாக இறுதி மாதவிடாய் அடைந்தவர்களுக்கும் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைப் பேறுக்காக நெடுநாட்கள் எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகளாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும். ஹார்மோன் சிகிச்சை அதாவது 'ஈஸ்ட்ரோஜன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி', 'ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி' போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.

பிரசவத்திற்குப் பிறகும் சிக்கென்று...

பிரசவத்திற்குப் பிறகும் சிக்கென்று...
கல்யாணமும் ஆயிடுச்சு... குழந்தையும் பெத்தாச்சு... இனிமேல் என்னத்துக்கு "சிக்"குனு இருக்கணும் என்று அலட்சியமாக நினைக்கும் பெண்ணா நீங்கள்? அப்ப, இது நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய மேட்டருங்க!
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...!

கருக்கலைப்பினால் ஏற்படும் பாதிப்புகள்

கருக்கலைப்பினால் ஏற்படும் பாதிப்புகள்
உலக அளவில் ஆறுலட்சம் அபார்ஷன்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஆயிரம் கர்ப்பிணிகளில் பதின்மூன்று பெண்களுக்கு அபார்ஷன் ஆகிவிடுகிறது. இந்த பதின்மூன்றில் ஐந்து பெண்களுக்கு தானாகவே அபார்ஷன் ஆகிறது. ஆனால், மீதி எட்டுப் பெண்கள் தாங்களாகவே முன் வந்து அபார்ஷன் செய்கிறார்கள். இப்படி அபார்ஷன் செய்ய முன் வரும் பெண்களில் அதிகமானோர் 25 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் பலர் கல்லூரிகளில் படிக்கும் இளம்பெண்கள் என்பதையும் யு.கே.விலுள்ள University of Aberdeen நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.
இதுபோன்ற பல ஆய்வுகளில் திருமணமான பெண்களைவிட திருமணமாகாத பெண்களே அதிகமாக அபார்ஷன் செய்ய முன்வருகிறார்கள் என்ற ஆய்வுத்தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. அப்படி அடிக்கடி அபார்ஷன்கள் செய்வதால் இளம்பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

சனி, 24 ஜனவரி, 2015

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!

சிலர் பணத்தைக் கொடுத்து வியாதிகளை வாங்குகிறார்கள் !
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்!
நீங்கள் எந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஒரு பொன்னான விஷயம் இருக்கிறது. அது- "சர்க்கரையைத் தவிருங்கள்". 
எடை அதிகரிப்பு, அது தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல் முக்கியமான காரணம் சர்க்கரைதான். ஆனால் உங்கள் உணவில் சர்க்கரையை ஒதுக்கும் முடிவை உள்ளுணர்வோடும் உறுதியோடும் எடுக்க வேண்டும். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் "சுகர் ப்ரீ" அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் அங்கே பிரபலமாக இடம் பிடித்தன.
செயற்கை இனிப்பூட்டிகள் என்றால் என்ன? எல்லோரும் அவற்றைப் பயன்படுத்தலாமா?

இயற்கை இளநீரும், செயற்கை குளிர்பானமும்...

இயற்கை இளநீரும், செயற்கை குளிர்பானமும்...
இளநீரில் இருப்பவை:
சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

காய்கறியின் பயன்கள்

காய்கறியின் பயன்கள்
கத்தரிக்காய்:- நினைவாற்றலை பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
காலிபிளவர்:- நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்வு தரும்.
பீன்ஸ்:- எலும்பு, பற்களின் பலத்தை கூட்டும். கல்லீரல் உஷ்ணத்தை நீக்கும்.
பீட்ரூட்:- ரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும்.
உருளைக்கிழங்கு:- சரும நோயை விரட்டும். உடலுக்கு வலிமை தரும்.
பரங்கிக்காய்:- பித்தம், சூடு, மேகநோய், மூலநோயை விரட்டும். (வாத குணம் உடையது)
புடலங்காய்:- வயிற்று பூச்சிகளை கொல்லும். வாதபித்த கபத்தை போக்கும்.
சுரைக்காய்:- தாகம் தணிக்கும். உடலை உரமாக்கும்.
வாழைத்தண்டு:- உடல் நஞ்சை நீக்கும். பித்தம், உடல் உஷ்ணத்தை போக்கும். சிறுநீரக கற்களை நீக்கும் சக்தி உடையது.
பலாக்காய்:- மூளைக்கு வலிமை தரும். வீரிய புஷ்டி உண்டாக்கும்.
முட்டைக்கோஸ்:- குடல் புண்களை ஆற்றும். வாயுத்தொல்லை, நெஞ்சுவலியை போக்கும்.
முருங்கைக்காய்:- நரம்புகளை வலுவாக்கும். கருப்பை கோளாறுகளை விலக்கும்.
பாகற்காய்:- நீரிழிவை போக்கும். வயிற்று பூச்சிகளை கொல்லும்.

குழந்தைகளுக்கான உணவு வகைகள்

குழந்தைகளுக்கான உணவு...
மசித்த ஆப்பிள்...
குழந்தைகளுக்கு ஜீரண சக்தி சற்று குறைவு என்பதால் பழங்களை அப்படியே கொடுப்பது சரியாகாது. எனவே சற்று நேரம் வேகவைத்த பழங்களை நன்கு மசித்து கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு ஆப்பிள்...