செவ்வாய், 31 மார்ச், 2015

மன்னிக்கும் குணம் இருக்கா..? உங்களுக்கு இதயநோய் வராது.. ஆய்வில் தகவல்.

நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மார்பகப் புற்று நோயா இனி ஆபரேசன் இல்லா சிக்ச்சை

மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதி நவீன ரேடியேசன் தெரபி முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்கவேண்டிய கட்டாயம் இருந்தது.

அலுவலகத்தில் மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்

அலுவலக வேலையோ வீட்டு வேலையோ அழுத்தம் இல்லாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்றைக்கு இருக்கும் பணிச்சுமை பெண்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பணிக்குச் செல்லும் 70 சதவிகித பெண்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 40 சதவிகித பெண்கள் இதயம் தொடர்பான நோயினால் பாதிப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்குக் காரணம் பெண்களுக்கு ஏற்படும் பணிச்சுமைதான்.

மெடிடேசன் செய்தால் இதயநோய் பக்கவாதம் வராது.. ஆய்வில் தகவல்

தினசரி இரண்டுமுறை [மந்திரம் ஜெபித்து]தியானம் செய்வது  மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வியாழன், 26 மார்ச், 2015

வேலை பளுவினால் இதயம் பாதிக்கும்

மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு. ADVERTISEMENT இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர்.

உங்க இதயம் துடிப்புல வித்தியாசம் இருக்கா? உடனே கவனியுங்க

மனிதர்களுக்கு இதயத்துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 113 முறை ஏற்படுகிறது என்கின்றர் மருத்துவர்கள். இதயத்துடிப்பு குறைந்தாலோ, அது அதிகமானாலோ ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை குறைவாக உள்ள 12 ருசியான உணவுகள்

நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?

முழு நட்ஸ் இவைகளில் புரதம், ஆரோக்கியமான இதயத்திற்கான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. இவைகளில் சர்க்கரை குறைவாக இருப்பதால், சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லதாகும்.
பிஸ்தா பருப்புகளில் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. அது உங்களை ஆற்ற திறனுடனும் நிறைவுடனும் வைத்திருக்கும். இதிலும் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லதாகும்.

செவ்வாய், 24 மார்ச், 2015

இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த அன்றாடம் பின்பற்ற வேண்டிய 8 பழக்கங்கள்

சரியான நேரத்திற்கு உறக்கம் உறக்கமின்மை பெரிய அளவில் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது என்னவெனில் நல்ல உடல் நலத்திற்கு நல்ல உறக்கம் தேவை. அதாவது, சரியான நேரத்திற்கு போதுமான அளவு நன்கு உறங்க வேண்டும். நல்ல உறக்கம் இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாது நல்ல உடல்நல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்

புகைப்பிடிப்பது இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

இதய துடிப்பு சீராக வைக்கும் உணவுகள்

தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.
வாழைப்பழத்தில்
பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இப்படிப் பண்ணிப் பாருங்களேன்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதலே முதன்மையான வழியாகும். சரிவிகித ஊட்டச்சத்து தரும் உணவு முறையே ஆரோக்கியமான உடலையும் இதயத்தில் அழுத்தத்தையும் குறைத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளின் மனநிலை

குழந்தைகளின் மனநிலை
சார் நல்ல மூட்ல (Mood) இருக்காரா காரியம் சாதித்துக் கொள்ள வந்தவர் கேட்பார்.
உங்க ஃபைல்ல இப்போ கை எழுத்து போடற மூடில் அவர் இல்லை உயர் அதிகாரி பற்றி கடைநிலை ஊழியர் சொல்வார்.
ப்சு .. படிக்கிற மூடே இல்லை புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு வெளியில் புறப்படுவான் கல்லூரி மாணவன்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!
உலகில் எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

விதைகளிலும் மருத்துவ குணம் உண்டு!

விதைகளிலும் மருத்துவ குணம் உண்டு!
வேப்ப விதை:
வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இந்த பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்களுக்கு தயாரிக்கப்படும் எண்ணெய்களில் சேர்க்கப்படுகிறது. விதையின் மேல் ஓட்டை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெயை தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.

புதன், 11 மார்ச், 2015

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்!

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போலச் செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர். குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க முடியும். அதற்கு முக்கியமான கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் உற்று நோக்கவேண்டும்.
1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும். தினமும் தன் தந்தையிடம் பணப்பையைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பையை தூர எறிவது போல நடித்துக் காட்டுவது வழக்கம். இதை உற்றுநோக்கி வளர்ந்த குழந்தை. ஒரு நாள் தொடர் வண்டியில், பயணம் சென்று கொண்டிருந்தபோது தந்தையின் பணப்பையை எடுத்து சன்னல் வழியே எறிந்து விட்டது.

ஞாயிறு, 8 மார்ச், 2015

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும். சில பெற்றோர்கள் தாம் சொல்வதைக் கேட்டு தமது இலட்சியத்தை கடைப்பிடிப்பார்கள் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.

பிள்ளையின் மனதில்...

பிள்ளையின் மனதில்...
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா?