புதன், 29 ஏப்ரல், 2015

அப்பெண்டிசிட்டிஸ் அறிகுறியும், பாதிப்பும்...


அப்பெண்டிசிட்டிஸ் அறிகுறியும், பாதிப்பும்...
குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" வந்தால் அஜாக்கிரதை கூடாது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட, குடல்அழற்சி நோய் எனப்படும், "அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறு வரும். இதன் அறிகுறி தெரிந்தவுடன், டாக்டரிடம் காட்டி, கிசிச்சை செய்வதுதான் சரியான முடிவு.

இந்த விஷயத்தில் கவனக்குறைவு கூடாது. அஜாக்கிரதையாக இருந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். அடிவயிற்றின் எல்லா பகுதிகளையும், தொற்றுக்கிருமிகள் பாதித்து, கோளாறு முற்றிவிடும்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

தலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும். நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

இயல்பாக புன்னகைக்க...


இயல்பாக புன்னகைக்க...
பற்களில் குறைபாடு உள்ளவர்களால் நான்கு பேர் மத்தியில் சிரிக்கவே முடியாது. அதுவும் பற்களில் குறிப்பாக முன் பற்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் இயல்பாக புன்னகைக்க முடியாது.

வசீகரமான புன்னகையை நாம் இழப்பதற்கான முக்கியக் காரணங்கள் பற்காரை, பற்சொத்தை, பற்கள் உடைதல், பற்களில் ஏற்படும் நிறமாற்றம், பற்கள் இல்லாத நிலை, தெற்றுப்பற்கள் போன்றவை ஆகும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!
வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்

சனி, 25 ஏப்ரல், 2015

கோடை காலத்தில் அடிக்கடி நீர்க்கடுப்பு வருவதேன்?


கோடை காலத்தில் அடிக்கடி நீர்க்கடுப்பு வருவதேன்?
வெந்தயக்களி, உளுந்துக்களி, கேழ்வரகு கூழ் (அ) கஞ்சி, பாசிப்பயறு பொங்கல், பூசணிக்கூட்டு, தண்டுக்கீரைக் கூட்டு, வாழைப் பூ வடகம், பார்லி கஞ்சி, இத்தகைய பாரம்பரிய 'கூல் மெனு' இருக்க பயமுறுத்தும் கூல் ட்ரிங்ஸ்கள் எதற்கு?

மனித உடலுக்குத் தண்ணீ­ரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது. தினசரி உபயோகத்துக்குத் தண்­ணீர் உடலுக்குத் தேவை. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் நாற்பது மில்லி லிட்டர் தண்­ணீர் தேவை. ஒருவரின் எடை அறுபது கிலோ என்றால் 2.4 லிட்டர் தண்ணீ­ர் வேண்டும். கோடையில் இருபத்தைந்து சதவீதம் அதிகம் தேவை. அதனால் தண்ணீ­ரைக் குடியுங்கள்.

கோடையில் வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, முன் நெற்றித் தோல் கறுப்பாகிவிடும். சோற்றுக்கற்றாழை மடலினுள் (நொங்கு) போன்றிருக்கும் சதைப்பற்றால், பாதிப்புற்ற இடத்தைக் கழுவி வர கருமை நிறம் மறையும். வெயிலில் சென்று வந்தால் வரும் தலைவலி சிலருக்கு வாழ்நாள் பிரச்சினை. 'சுக்கு, மல்லி காபி' இத்தலைவலிக்கு உகந்த மருந்து.

நீர்ச்சத்து அதிகமுள்ள பழவகைகள் எவை எவை தெரியுமா?

வெள்ளரி - 95%
தர்பூசணி - 98%
பால் - 90%
ஆப்பிள் - 85%
திராட்சை - 81%
ஆரஞ்சு - 87%
வாழைப்பழம் - 75%

அதனால் கோடைக் காலத்தில் இவைகளை நிறைய சாப்பிடுங்கள்.

கர்ப்பிணி பெண்ணா?

கோடையுடன் வாந்தியினாலும் நீரிழப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. கருப்பை சிறுநீர் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வீர்கள். மாதுளை பழச்சாறில் சிறிது தேன் அல்லது பனைவெல்லம் கலந்து தினசரி சாப்பிடுங்கள். நீரிழப்பையும் தவிர்க்கலாம். வாந்தி உணர்வுக்கும் நல்ல மருந்து. மாதுளையின் இரும்புச்சத்து இன்னும் உதவிடும் உங்களுக்கு.

உடலில் நீர்ச்சத்து ஒரு சதவீதம் குறையும் போதே தாகம் தவிக்கத் தொடங்கி விடும். பத்து சதவீதம் குறைந்தால் தசை இறுக்கம், ஊரல், பலஹீனம் ஏற்படும். பதினோறு சதவீதத்துக்கு மேல் குறைந்தால் சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கும். நீர்ச்சத்து இருபது சதவீதம் குறைந்தால் மரணம் நிச்சயம். எனவே தாகம் எடுக்காமல் இருந்தால் கூட அவ்வப்போது தண்ணீ­ர் குடிக்க மறக்காதீர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு 'நா வறட்சி' கோடையில் மேலும் அதிகமாகும். அதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொண்டு உமிழ்நீரைப்பருக 'நா வறட்சி' மறையும்.

அதிக வேர்வையில் தோலின் வெளிப்புறம் பூஞ்சை பெருகும். அக்குள் பகுதியில் அரிப்பையும், தேமலையும் உருவாக்கிவிடும். இவற்றை ஒழிக்க சோப்புக்குப் பதிலாக நலுங்குமாவைத் தேய்த்துக் குளித்துவர பூஞ்சை மறையும்.

கோடையில் 'மெட்ராஸ் ஐ' பிரபல விருந்தாளி படுவேகமாகப் பரவும். இதிலிருந்து கண்ணைப் பாதுகாக்க நத்தியாவட்டை பூவை கண்ணில் வைத்து அழுத்துவதும், இளநீரில் கண்களைக் கழுவுவதும் நல்லது.

கோடையில் வரும் 'சன் ஸ்ட்ரோக்' மரணத்தைக் கூட நிகழ்த்திவிடும். தோல் வியர்க்காது இருத்தல், படபடப்பு, தலைவலி, தலை சுற்றல், குமட்டல், குழப்பமனம், மயக்கம் ஆகியவை சன் ஸ்ட்ரோக்கிற்கான அடையாளங்கள்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி தோலில் ஏற்படும் கோடைக் காயங்கள் (sun burns) முதுமையில் தோல் புற்று நோய்க்கு வழிவகுக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜாக்கிரதை.

வயிற்றுப் போக்கும், வாய்ப்புண்ணும் கோடையில் அதிகம் அவதியளிக்கும் விஷயங்கள். வயிற்றுக் குடலினுள் குடியிருக்கும் நன்மையளிக்கும் நுண்ணுயிரியான (லேக்டோபஸிலிஸ்) குறைவதே இதற்குக் காரணம். மோரில் இந்த நுண்ணுயிரி நிறைய இருக்கிறது. மோர் குடிக்க 'No More' வாய்ப்புண்.

காபி, மதுபானம் அதிக சர்க்கரை ஆகியவற்றை கோடையில் தவிர்ப்பது நல்லது. இவை உடலில் நீர்ச்சத்தை வேகமாக இழக்கச் செய்யும்.

கோடையில் கிடைக்கும் வடுமாங்காய் வாய்க்கு மட்டுமல்ல நோய்க்கும் நல்லது. அதிலிருக்கும் மெல்லிய துவர்ப்புத்தன்மை அனைவருக்கும் நல்லது. ஜீரணத்தைத் துரிதப்படுத்தி பசி உண்டாக்கும். வடுமாங்காய் கோடையில் உங்கள் 'மெனு'வில் தினசரி இருக்கட்டும்.

இளநீர், இயற்கை அளிக்கும் கோடைக்கான சத்துமிக்க 'மினரல் வாட்டர்'. சோடியம், மக்னீசியம், கால்ஷியம் சேர்ந்த பாக்டீரியா இல்லாத தொண்ணூற்று ஒன்பது சதவீத நீர்ச்சத்துள்ள பானம். இதிலுள்ள லாரிக் அமிலச் சத்து இளநீருக்கு அடுத்து தாய்ப்பாலில் மட்டும்தான் அதிகம் உண்டு.

வியர்க்குருவின் பிறப்பே பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான். சூரியக் கதிர்கள் தோலில் தொடர்ந்து தாக்குவதால் ஏற்படும் எழுச்சிகள் தான் இது. பன்னீர், சந்தனம், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால் வியர்க்குரு மறையும்.

வறுத்த, பொரித்த, கோழிக்கறி, போன்ற உணவு வகைகளை கோடையில் தவிர்த்துவிடுங்கள். மீனும் பன்றி இறைச்சியும் நல்லது. வெயிலின் உக்கிரத்தில் 'அம்மை' நோய் அவதி அதிகம் வரும். அம்மை வராமல் தடுத்துக்கொள்ள வாரம் இருநாள் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்கள். மிகுந்த குளிர் பானங்களை கோடையில் தவிர்க்க வேண்டும். அதிக குளிர்தன்மை கொண்ட இவை வயிற்று வலியை உண்டாக்கும். ஒரு நாளைக்கு அறுநூறு கிலோ கலோரி உடல் செயல்திறனைப் பெற, ஒரு லிட்டர் வியர்வையை வெளியேற்றுகிறோம் என்பது தெரியுமா? உங்களுக்கு?

வியர்க்குருவின் தீவிர வளர்ச்சியே 'வேனல் கட்டிகள்' சீழ்க் கட்டிகளாக மாறிவிடும். கட்டி நன்கு பழுத்துவிட்டால் சுட்ட மஞ்சள் பொடி போட்டு விளக்கெண்ணெய் தடவி வெற்றிலையில் மேல் பூச்சாக ஒட்டிவிடலாம் கட்டி உடைந்து சீழ் வெளியேறி கட்டி ஆறிவிடும்.


மஞ்சள் காமாலையா? உஷார்!


மஞ்சள் காமாலையா? உஷார்!
பலரையும் அலற வைக்கும் சத்தமில்லாத எதிரி மஞ்சள் காமாலைதான்! குழந்தைகள், பெரியவர்கள் என்ற எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் வரும் மஞ்சள் காமாலையும் ஒரு தொற்று வியாதிதான்! குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால். வீட்டிலுள்ள அனைவருக்கும் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை நம்முடைய உடலில் அழையா விருந்தாளியாக தங்கியிருந்துவிட்டுச் சென்று விடும்.

இது ஹெப்படைடிஸ் ஏ, பி, சி, இ என்று 4 வகைப்படும்.

'ஹெப்படைடிஸ் ஏ'

இந்த வகை மஞ்சள் காமாலைதான் நம்மில் அதிகம் பேருக்கு வருவது... இது அதிக ஆபத்தில்லாதது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்திலேயேகூட குணப்படுத்திவிடலாம்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?


சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று தொல்லையில்லா வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

உடல் எடையை குறைக்க ஆசையா?


உடல் எடையை குறைக்க ஆசையா?
உடல் எடையை குறைக்க எண்ணெய், சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துங்க!

வேலூரில் உள்ள பிரபல டாக்டர் கீதா மத்தாய், ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். மிக நேர்த்தியாக, அதிக சிரமமில்லாமல் உடல் எடையைக் குறைக்கும் வழியைச் சொல்லியுள்ளார் இவர்.

புதன், 22 ஏப்ரல், 2015

மன நோயின் அறிகுறி...


மன நோயின் அறிகுறி...
சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் இது. பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது. தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்த மற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அவைகள் வேரூன்றியிருக்கும்.

மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு வரும்!


மனநல பாதிப்பாலும் வயிற்றுப்போக்கு வரும்!
சில நாட்களுக்கு முன்பு 20 வயதுள்ள ஆண்மகனை அழைத்துக் கொண்டு அவனுடைய அம்மா என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். நல்ல திடமான தேகம், கல்லூரியில் படிப்பு, விளையாட்டு வீரர்.

பையனுக்கு என்னம்மா? 15 நாளா இவனுக்கு வயிற்றுப் போக்கு இருக்குது. எல்லா வைத்தியமும் செய்தாச்சு. வயிற்றுப் போக்கு நிக்கமாட்டேங்குது டாக்டர்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!
வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!


லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!
வயிற்று பிடிப்பு - ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. வயிற்றில் உள்ள தசைப்பிடிப்பு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிறு உப்பி காணப்படுவது போன்ற குறைபாடுகள் எல்லாம் சாதாரணமாக வருபவை என்று நினைக்கக்கூடாது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!
பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய....

பொடுகுக்கு டாட்டா!

பொடுகுக்கு டாட்டா!
* மூன்று கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலைகளை நன்றாக கழுவி, பசை மாதிரி அரைத்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து குளியுங்கள்.

* 100 கிராம் சித்தாமுட்டி வேரை எடுங்கள். இதில் 400 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். இது 100 மிலி ஆகும்வரை சுண்ட காய்ச்சுங்கள். பிறகு லேசாக ஆறவைத்து அதைதலையில் தேய்த்துக் குளியுங்கள்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஜீரண பிரச்சனைகள்

ஜீரண பிரச்சனைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

வாய் துர்நாற்றத்தை போக்க

வாய் துர்நாற்றத்தை போக்க
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க் கொப்பளித்து விடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்த மல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

சனி, 11 ஏப்ரல், 2015

மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!


மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! மனிதனுக்கு ‘மன அழுத்தம் ‘ என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக் கும். அதை மனிதனை அளிக்கும் ‘எமன் என்றுகூட சொல்லலாம். அது எதனா ல் வருகின்றது மற்றும் அதற்கான தீர் வுகளைப் பார்ப்போம். வரும் காரணம் : 1 மனதில் ‘தாழ்வு மனப்பான்மை மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவ ன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என் ஒரு உணர்வு. அதன் தீர்வு : 1 இப்போது இருக்கும் நிலைமை யை மட்டும் வைத்து எண்ணிக் கொண்டு இருக்காதே!

நெஞ்சு எரிச்சல் ஏன்? [தடுக்க சில வழிகள்]

நெஞ்சு எரிச்சல் ஏன்? [தடுக்க சில வழிகள்]

நெஞ்சு எரிச்சல் ஏன்? ( தடுக்க சில வழிகள் ).! வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்

புதன், 8 ஏப்ரல், 2015

எளிய மருத்துவம்

நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட :   தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

இரத்த அழுத்தம் சரியாக :   டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க :   மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

எளிய மருத்துவக் குறிப்புகள்


சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

புதன், 1 ஏப்ரல், 2015

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

சர்க்கரை நோயா??

சரியான எடை உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும்.
சுறுசுறுப்பான நடை போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.

சர்க்கரை நோயால் வீக்கம் அடையும் கால்களுக்குகான சில டிப்ஸ்

தினமும் உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளையும், தசைகளையும் வலிமை பெற செய்ய முடியும் என்று திரு.ஹிமேடு கூறுகின்றார். மேலும், இதனால் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். மேலும் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது என்று இவர் கூறுகின்றார்.
கால்களை உயரே தூக்கவும் நெஞ்சுக்கு மேல் கால்களை 10-15 நிமிடத்திற்கு தூக்கி வைப்பது நல்லது. இப்படி செய்யும் போது அடியில் தலையணை வைத்து செய்தால் விழாமல் செய்ய முடியும். இந்த பயிற்சியால் கால் வீக்கம் குறையும். இந்த பயிற்சி தேவையற்ற திரவம் சுரப்பதை தவிர்த்து கால்களை சுற்றியுள்ள திசுக்களுக்கு வலிமை தருகின்றது.