ஞாயிறு, 28 டிசம்பர், 2014

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..

கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

அழகு தரும் ஆப்பிள்!

அழகு தரும் ஆப்பிள்!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி...........!

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

வியாழன், 25 டிசம்பர், 2014

மன சோர்விலிருந்து விடுபட

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.

கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம்
நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில்
சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை
பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

புதன், 24 டிசம்பர், 2014

தேன் [Honey]

The Holy Qur'an says:

 "And your Lord revealed to the bee saying: Make hives in the mountains and in the trees and in what they build: Then eat of all the fruits and walk in the ways of your Lord submissively. There comes forth from within it a beverage of many colours, in which there is healing for men; most surely there is a sign in this for a people who reflect." (Qur'an an-Nahl 68-69)

Listed below are some common problems which can be cured by honey:

Over the centuries, the great power and strength possessed by honey has been underestimated by scientists. It's an element whose curing ability has surprised all levels of intellect. A few of the very many cures from honey have been outlined:

For burns: Apply freely over burns. It cools, removes pain and aids fast healing without scarring. Apart from being a salve and antibiotic, bacteria cannot live in honey.

Bed Wetting: A teaspoon of honey before bed aids water retention and calms fears in children.

Sleeplessness: A dessert spoon of honey in a mug of hot milk aids sleep and works wonders!

Hyperactivity: Honey is a mild sedative with minerals, vitamins, amino acids etc. Replace all white sugar with honey. White sugar is highly stimulating with no food qualities!

Nasal Congestion: Place a dessert spoon of honey in a basin of hot water and inhale fumes after covering your head with a towel over the basin. Very effective.

Wounds or Grazes: Cover wound with honey and a bandage. Excellent healer.

For Fatigue: Dissolve a desert spoon of honey in warm water or quarter honey balance of water in a jug and keep in the fridge. Honey is primarily fructose and glucose and so it is quickly absorbed by the digestive system. (Honey is a unique natural stabilizer - ancient Greek athletes took honey for stamina before competing and as a reviver after competition.)

Facial Deep Cleanser: Mix honey with oatmeal approx. 50/50 till thick and apply as a face-pack. Leave on for half an hour then wash off. Great as a deep cleanser for acne etc.

Poor Digestion: Mix honey with apple cider vinegar (non-alcoholic) approx. 50/50 and dilute to taste with water. This aids digestion. (Also reputed to be wonderful for the joints.

Hair Conditioner: Mix honey with equal quantity of Olive Oil and cover head with a warm towel for half an hour then shampoo off. Feeds hair and scalp. Hair will never look or feel better!

Sore Throats: Let a teaspoon of honey melt in the back of the mouth and trickle down the throat. Eases inflamed raw tissues.

For Stress: Honey in water is a stabilizer - calms highs and raises lows. Use approx. 25 percent honey to water.

Anemia: Honey is the best blood en-richer by raising corpuscle content. The darker the honey the more minerals it contains.

Food Preservative: Cakes with honey replacing sugar stay fresher longer due to natural antibiotics. Reduce liquids by approx. one-fifth to allow for moisture in honey.

Heart Patients: These people are well advised to replace white sugar (sucrose) with honey, natural fructose and glucose.

Hay-fever: Chewing the tops of comb honey stimulates the immune system due to minute amounts of pollen. During the season chew for 20 minutes a teaspoon of bee capping (tops) five to six times per day. Highly effective and useful for asthma sufferers as well.

Baby's Bottle: Four teaspoons of honey to a baby's bottle of water is an excellent pacifier and multivitamin additive. If baby's motions are too liquid then reduce by half a teaspoon; if too solid increase by half a teaspoon.

Teething: Honey rubbed on a baby's gums is a mild sedative and anesthetic.

Osteoporosis: English research has shown that a teaspoon of honey per day aids calcium utilization and prevents osteoporosis. Essential from age 50 onwards.

Long Life: One common fact worldwide is that the most long-lived people are regular users of honey. An interesting fact yet to be explained is that beekeepers suffer less from cancer and arthritis than any other occupational group worldwide.

Migraine: Use a dessertspoon of honey dissolved in half a glass of warm water. Sip at start of attack. If necessary repeat in 20 minutes. Always effective (Insha Allah) as migraine is stress related.

Conjunctivitis (pus in the eye): Honey dissolved in equal quantity of warm water. Apply, when cooled, as lotion or eye bath.
நன்றி.. darulsafa .com
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக .
தேன் இனித்தேன் ! சில நோயிகளுக்கு  குணம் அளித்தேன் !  

ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்

ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான். ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது. அதே சமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சனி, 20 டிசம்பர், 2014

ஆண்மை குறைவை போக்கும் ஜாதிக்காய்!

ஆண்மை குறைவை போக்கும் ஜாதிக்காய்!
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

இள நரை மறையணுமா?

இள நரை மறையணுமா?
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

தேகத்தை பளபளப்பாக்க...

தேகத்தை பளபளப்பாக்க...
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காது வலிக்கு நல்ல மருந்து ஆலிவ் எண்ணை!

காது வலிக்கு நல்ல மருந்து ஆலிவ் எண்ணை!
பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரிந்தவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

வறட்டு இருமல்:

வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா:

தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்கு:

அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே.

அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம்.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா:

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

தலை முடி பிசுபிசுப்புக்கு:

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.

சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.

பலாப் பழத்தை அதிகம் உண்ணாதீர்கள்!

பலாப் பழத்தை அதிகம் உண்ணாதீர்கள்!
உணவே மருந்து. ஆனால் அதுவே அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறைகள்:

* பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா?
பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ:

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

இருதய நோய் குணமாக...

இருதய நோய் குணமாக...
செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.

செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும்.

மெல்லிடை மேனிக்கு...

மெல்லிடை மேனிக்கு...
மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

தலை கனத்திற்கு மருந்தாகும் சுக்கு!

தலை கனத்திற்கு மருந்தாகும் சுக்கு!
முள் குத்தி வலி எடுத்தால்:

இரும்பு, முள் அல்லது கண்ணாடி குத்தி வேதனை இருந்தால் மிளகாய் வற்றல் 4 அல்லது 5, அம்மியில் வைத்து தண்ணீர் தெளித்து மசிய அரைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் விழுதைப் போட்டுக் கிளறவும். வதக்கி கலர் சற்று மாறியதும், ஒரு சுத்தமான துணியில் அதைத்தட்டி வேதனை உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்துவிட்டு அப்படியே அதை துணியுடன் வைத்துக் கட்டி விடவும். அல்லது வெங்காயத்தை உப்பு மஞ்சள் சேர்த்து தட்டி ஒரு கரண்டியில் நல்லெண்ணெயைக் காய வைத்து துணி முடிப்பை அதில் முக்கி இளம் சூட்டில் ஒத்தடம் கொடுத்து அதையே கட்டி விடவும்.

ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!

ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாணமுருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.

இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

தோல் நோய் குணமாக...

தோல் நோய் குணமாக...
வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மூட்டு வலி குறைய..

மூட்டு வலி குறைய...
"எனக்கு ஒரே மூட்டுவலி பாட்டி.. இருக்க இருக்க மூட்டுக்கு மூட்டு வலி அதிகமாகிக்கிட்டே இருக்கு... வீக்கமும் அதிகமாகிக்கிட்டே இருக்கு...என்ன செய்யிறதுன்னே தெரியல... நீங்க ஏதாவது மருந்து சொல்லுவீங்கன்னுதான் வந்தேன்...."

பேச்சியின் மூட்டுவலி வேதனை பற்றிய புலம்பலைக்கேட்ட பாட்டி, 'இப்ப ஒனக்கு வயசு 50.. 51 இருக்குமா...'

'ஆமா பாட்டி.. 50 முடியப்போவுது..'

"..ம்.. 48.. 50.. வயச நெருங்கினாலே உடம்புக்குள்ள எல்லா வலியும் ஒண்ணொண்ணா வர ஆரம்பிச்சிடும். ஆனா இந்த காலத்து பசங்களுக்கு சின்னவயசுலயே எல்லாம் வர ஆரம்பிச்சிருது... இப்ப ஒனக்கு மூட்டு வலி..."

'வாத நீரு கப நீரோட கலந்து மூட்டுல இறங்குறதாலதான் இந்த மூட்டுவலி வருது...'

"இந்த கோளாரு இருக்கும்போது குளிர்ந்த காத்து அடிச்சாக்கூட வலி அதிகமா தெரியும். பருவநிலை மாறுற காலத்துலயும், இந்த மூட்டுவலி அதிகமாகும்..மலச்சிக்கல் இல்லாம வயித்த சுத்தமா வச்சிக்கிறவங்களுக்கு மூட்டுவலி அதிகம் வாறதில்ல.. மாதவிடாய் ஒழுங்கா இல்லையின்னாலும் கண்டிப்பா மூட்டுவலி வரும்.

"நீ.. கற்பூரத் தைலத்த தொடந்து தேச்சிக்கிட்டே வா. அதோட ...

கருஞ்சீரகம் - 10 கிராம்

கார்கோல் - 10 கிராம்

கோஷ்டம் - 10 கிராம்

தேவதாரம் - 10 கிராம்

ராமிச்சம் - 10 கிராம் இவைகள எடுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு, கற்பூரவள்ளி இலை, குப்பைமேனி இலை, வேலிப்பருத்தி இலை, அமிர்தவல்லி இலை இவைகள தனித்தனியா வகைக்கு 100 மி.லி. சாறு எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1 லிட்டர் நல்லெண்ணெய் சேத்து எடுத்து வச்சிருக்குற சாறு, இடிச்சபொடியையும் போட்டு நல்லா காய்ச்சி, அடியில களி மாதிரி வரும். திரும்பவும் காச்சிக்கிட்டே இருந்தா மணல் மாதிரி வரும். அத அப்படியே இறக்கி எண்ணெய வடிகட்டி அதுல 5 கிராம் பச்சைக் கற்பூரம் போட்டு பாட்டில்ல அடச்சி வச்சிக்கிட்டு காலையிலயும், சாயந்திரமும் மூட்டுவலி இருக்குற இடத்துல பூசிக்கிட்டு வந்தா மூட்டுவலி கொறயும்.."

எளிதா செரிக்கிற சாப்பாட்ட சாப்பிடு... மூட்டு வலி நம்ம கைப் பக்குவத்திலயே வராதபடிக்கு பாத்துக்கலாம்... மலச்சிக்கல் இல்லாம பாத்துக்க. வாயுவ உண்டாக்குற பதார்த்தங்கள ஒதுக்கிடு.. ஏன்னா வயசு ஆயிக்கிட்டே இருக்குல்லயா...

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கொண்ட பேச்சி, லேசான ஏக்கத்துடன், தனது இளமைக்கால கதைகளைப் பேசத் தொடங்கினார்.

பெருங்காயம்

பெருங்காயம்
பித்தம் நீங்க:-

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

புழுக்களை ஒழிக்க:-

சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும். வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களை இது அழிக்கிறது.

புரதச்சத்து பெற:-

பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

மருத்துவகுணமும் உடையது:-

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......
 
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

திங்கள், 15 டிசம்பர், 2014

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்!

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்!
ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

கண் நோய்களை தடுக்கும் பொன்னாங்கண்ணிச் சாறு!

கண் நோய்களை தடுக்கும் பொன்னாங்கண்ணிச் சாறு!
சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல் வியாதிகளை குணப்படுத்தலாம். நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச் சாறு கொடுப்பார்கள். இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர். இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை பார்ப்போமா....

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு:

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு:

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு:

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு:

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு:

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு:

தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு:

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு:

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு:

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

நஞ்சு நீக்கும் கடுகு

நஞ்சு நீக்கும் கடுகு
கடுகில் இரண்டு வகை உண்டு.

1) கருங்கடுகு
2) வெண்கடுகு

இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

செரிமானத்தைத் தூண்ட

செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

இருமல் நீங்க

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

வயிற்றுவலி குணமாக

அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

நஞ்சு உண்டவர்களுக்கு

சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

கருவேப்பிலை

கருவேப்பிலை
பித்தம் நீங்க:-

கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.

தலைவலி நீங்க:-

சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.

வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

பல்வலி நீங்க:-

சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.

பசியைத் தூண்டும் பெருஞ்சீரகம்!

பசியைத் தூண்டும் பெருஞ்சீரகம்!
நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படும் பெரும்பாலானவை உணவுப் பொருட்கள்தான். ஆதலால், நாம் சரியான உணவுப் பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாகக் கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்குத் தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும். கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாத நோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையைப் பெருக்கும். வெந்தயம் கசப்புச் சுவை உடையது. சீதக்காய்ச்சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவைத் தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் ஜவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியைத் தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவைக் குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியைக் குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்தரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்
சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

விழா காலங்களில் வயிறு உபாதைகளை தவிர்க்க...!

விழா காலங்களில் வயிறு உபாதைகளை தவிர்க்க...!
இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.

புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும்.

எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து, அந்த தண்­ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.

ஒரு டம்ளர் தண்­ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.

இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.

சமையல் செய்யும்போது கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாலும், அடுப்பில் சூடாக இருக்கும் பாத்திரத்தில் கையை வைத்து சூடு வாங்கிக்கொள்ள நேரிடும். அப்படி சூடு வாங்கிக்கொண்டால், உடனே அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அப்படிச் செய்வதால் சூடு பட்ட இடத்தில் கொப்புளம் போன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...
எதை சாப்பிட்டாலும் வாந்தியா வருது.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுது.. என்ன செய்யிறதுன்னே தெரியலனு புலம்புற புள்ளத்தாச்சியா நீங்கள்! அப்படின்னா இது உங்களுக்குதான்.

மசக்கையின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிணும்.

நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி சாப்பிட்டா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். இத மட்டும் தொடர்ச்சியா சாப்பிட்டு வந்தால் சரியாப் போகும்.

சிறுநீர் சரியா போகலையா.....

வெயில் அதிகமானதுல இருந்தே சிறுநீர் சரியா போகல... ஒரே கடுப்பா இருக்கு... சிறுநீர் கழிச்சப்புறம் ஒரே எரிச்சல், அடிவயிறு வலி ஊசியால குத்துறமாதிரி இருக்குனு சில பேர் புலம்புவாங்க... ஆனால், நீர்க்கடுப்புக்கு வெயில் மட்டுமே காரணம் இல்ல.. நேரத்துக்கு சாப்பிடாம இருக்குறது. சரியான தூக்கமில்லாம இருக்குறது... தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல்.. இதனாலேல்லாம் தான் நீர்க்கடுப்பு வருது... மொதல்ல இந்த பழக்கங்கள மாத்திக்கணும்...

சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை- இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்.

வேனல் காலமான இந்த காலகட்டத்துல நெறயா தண்ணி குடிக்கணும்.

நகம் கடிக்கும் குழந்தையா....

எம் பொண்ணு ஓயாம நகம் கடிக்கிறா.... நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியலனு தவிக்கிறங்க தாய்மார்களுக்கு.....

நகம் மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும்.  இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.

அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடும்.

இப்ப இத கவனமா கேட்டுக்கங்க.....

இஞ்சி - 1 துண்டு. முருங்கைப்பட்டை - 1 துண்டு எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடுத்து வாங்க. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வந்தால், வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.

நகச்சுத்திக்கு......

விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப்படுத்துது... ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டுருக்கீங்களா....?
 
கண்ட தண்ணியவும் குடிக்கிறது.. அளவுக்கு மீறுன அலைச்சல்.. சரியான தூக்கமில்லாதது... இதுனால ஏற்படுற உஷ்ணத்துல வர்றதுதான் இந்த மாதிரி கட்டியெல்லாம்...

சரி இப்ப சொல்ற மருந்த கவனமா கேட்டுக்கங்க...

சின்ன வெங்காயம் 5, கறிமஞ்சள் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வசம்புப் பொடிதலா 5 கிராம், சுக்கு ஒரு துண்டு, கொஞ்சம் முருங்கை இலை இது எல்லாத்தையும் சேத்து அரச்சி, அதுல எலுமிச்சை சாறு 25 மிலி விட்டு குழச்சி நகச்சுத்தி வந்த இடத்துல பத்து போட்டு, வெள்ளத் துணிய வச்சி கட்டுப்போட்டுக்கிட்டு வந்தால், 1 வாரத்துல எல்லாம் சரியாப்போயிடும்.

பழங்களின் மகத்துவம்!

பழங்களின் மகத்துவம்!
இயற்கை மனிதர்களுக்கு அளித்த மகத்தான வரங்களே பழங்களாகும்.

பழங்களில் புரதச் சத்தும் குறைவான கொழுப்புச் சத்தும் நமக்குப் போதுமான அளவில் இருக்கின்றன. பெரும்பாலான பழங்களின் ஈரப்பதம் 80 சதவிகிதம் உள்ளது. கார்போ ஹைட்ரேட் 20 சதவிகிதமே உள்ளது. பழங்கள் உணவாக மாறிட இதுவே காரணம். அவைகளில் தாது உப்புகள் உள்ளன. உயிர்ச்சத்தான வைட்டமின்கள் உள்ளன. மேலும் பேதி மருந்துபோல் செயல்பட்டுக் குடலைச் சுத்தப்படுத்தி விடுகின்றன.

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, ஆர்கனிக் அமிலம் என பல வடிவங்களில் பழங்கள் பயன்படுவதால், முதுமையும் தள்ளிப் போகிறது. சக்தியும், புத்துணர்வும் உடனுக்குடன் கிடைக்கிறது. உடல் உறுப்புகள் மலிவான செலவில் புதுப்பிக்கப்படுகின்றன.

எப்படிச் சாப்பிடலாம்? பழுத்த பிறகே சாப்பிடுவது சிறந்ததாகும். சமைக்காமல் உண்ணும்போது கார்போ ஹைடிரேட் முழுதும் கிடைக்கிறது. காலை நேரத்தில் உணவாய்க் கொள்வது நல்லது. நீரிழிவாளர்கள் மட்டும் வாழையைக் காலையில் உண்ணக் கூடாது. ஒரே நேரத்தில் பல பழங்களைச் சாப்பிடலாகாது.

நோயாளிகள் பிழிந்த சாற்றையே அருந்த வேண்டும். மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு உட்கொள்ளும் பழங்களின் அளவு குறைந்தது முந்நூறு கிராமாவது இருந்தால்தான் சாப்பிடும் மற்ற உணவுகளும் உடனடியாகச் செரிமானம் கொள்ளும்.

என்னென்ன இருக்கிறது? எந்த வகைப் பழத்திலும் ஏதேனுமோர் சத்து இருக்கிறது. ஒட்டுமொத்த பழ உலகம் படைக்கும் சக்திகளைக் காண்போம்.

1. புரதச்சத்து 2. கொழுப்புச் சத்து

3. மாவுச் சத்து 4. தாதுப் பொருள்

5. கால்சியம் 6. பாஸ்பரஸ்

7. இரும்புச்சத்து 8. மக்னீசியம்

9. சோடியம் 10. குளோரின்

11. பொட்டாசியம் 12. கோபால்ட்

13. நார்ச்சத்து 14. நீர்ச்சத்து, இவை தவிர எண்ணற்ற வைட்டமின்கள் என எத்தனையெத்தனை நன்மைகள் பழங்களில் புதைந்திருக்கின்ற பார்த்தீர்களா?

உற்சாகத்திற்கு வாழை: தினமும் வாழைப்பழம் உண்போர் நெடுநாட்கள் இளமைத் தெருவிலேயே வசிக்கிறார்கள். உற்சாகம் இழக்கும்போதும், காய்ச்சல் நேரத்திலும் இதைச் சாப்பிடலாம். நம் மூளையில் செரடோனின் என்ற பொருளை வாழைப் பழமே தயாரிக்கிறது. இது நன்கு சுரக்கும்போது, நரம்பு மண்டலம் விழித்தெழுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனநலம் குன்றியோருக்கு வாழைப்பழம் ஓர் அட்சய பாத்திரம்.

குரல் வளத்திற்கு அன்னாசி: அன்னாசிப் பழத்தில் புரோமெலின் என்னும் செரிமானப் பொருள் உண்டு. இது இறைச்சியையும் விரைந்து செரிக்க உதவுகிறது. நல்ல குரல் வளம் தருகிறது. தொண்டைப் புண் ஆற்றுகிறது. சதை வளராமல் தடுக்கிறது. இதிலுள்ள குளோரின் சிறுநீரக இயக்கத்தை தூண்டிக் கொண்டேயிருக்கிறது. தோலுக்கு அடியிலுள்ள அழுக்குகளையும் இது உறிஞ்சி வெளியேற்றுகிறது.

ஜீரண சக்தி தரும் பப்பாளி: தானே வளர்ந்து நிற்கும் பப்பாளி காயாகவும், பழமாகவும் பயன்படுகிறது. பச்சையாக உண்ணக்கூடிய 38 வகைப் பழங்களில் பப்பாளியும் உண்டு. இதில் உள்ள பாப்பைன் என்ற திரவம் ஜீரண சக்தியை தூண்டும். இதன் விதையிலுள்ள கார்சின் சிறந்த பூச்சிக் கொல்லியாகும். மதுவால் கெட்ட கல்லீரலையும், கொசுவால் வந்த யானைக்காலையும், நீரிழிவின் பேரழிவையும் பப்பாளிப் பழம் தடுத்துக் காக்கிறது.

ரத்த உற்பத்திக்கு திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது. திராட்சை ரசம் அருந்திய பின் பல தூக்குத் தண்டனைகளை ஆயுள் தண்டனையாய் மன்னர்கள் குறைத்ததாக ரோமன் வரலாறு கூறுகிறது.

பிள்ளைவரம் தரும் நாவல்: இது நம்ம ஊர்ப் பழமாகும். இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கணையத்துடன் இது நேரடித் தொடர்பு கொண்டு நீரிழிவுக்கு நியாயம் கேட்கிறது. சிறுநீர்க் கற்கள் கரையவும், தொழுநோய் குணமாகவும் நாவல் பழச்சாறு உதவுகிறது. அபூர்வமான வைட்டமின் ஈ இதில் உண்டு. பிள்ளைவரம் வேண்டும் பெண்கள் சாமியார்களைச் சுற்றாமல் நாவல் பழத்தைத் தின்னலாம். மலட்டுத் தன்மையைப் போக்கி, கர்ப்ப விருத்தியை நிச்சயம் பெறலாம்.

சிறந்த மருந்தகம் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.

ஆரோக்கியத்திற்கு அத்தி: இதைப் பற்றி ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.

ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

வயிற்றைப் பேணும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.

பார்வை இழப்பை தடுக்க மாம்பழம்: இது முக்கனிகளில் ஒன்று. இதிலுள்ள டார்டாரிக் அமிலமும், மாலிக் அமிலமும் நரம்புத் தளர்ச்சியின்றி உடலைக் காக்கின்றன. இது சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகும். பசியைத் தூண்டக் கூடியது. தோலுடன் சாப்பிட வேண்டும். அதிக பலன் கிடைக்கும். பார்வை இழப்பைத் தடுக்கிறது. புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது ஆண்மையைப் பெருக்கி, கூ(ட)டல் செய்கிறது. இது கிடைக்கும் போது சாப்பிட்டு வைத்தால் குளிர்காலத்தில் வரும் சளி, ஜல தோஷம் இவைகளை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம்.

இப்படி நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற வகைகளில் பழங்களுண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஒரு குணம் உண்டு. அவற்றைக் கண்டறிந்து ருசிக்க வேண்டியது நமது பொறுப்பு.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்:

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாலை நோய் குணமடையும்:

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு:

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்:

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.

சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கொத்தமல்லி

சுவாசக் கோளாறுகளைப் போக்கும் கொத்தமல்லி
உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.

மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவுகின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

இயற்கையான மருந்து...

இயற்கையான மருந்து...
சின்ன வெங்காயம்

முதல்ல... சின்ன வெங்காயத்தை அதிகமா... சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும். ஆண்மை விருத்திக்கும் நல்லது!

தேன்

இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க டாக்டருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா...நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல... நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.

தக்காளி

பழங்களில் நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியை, லண்டனில் உள்ள பார்வேர்டு மெடிக்கல் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி பண்ணினாங்க. அதுல விரைப்பை பகுதியில் வரும் புற்றுநோயை 20 சதவீதம் குறைப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.

தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல "லைஸோபீன்" என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப... ரொம்ப நல்லது. அதோடு, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.

முட்டைகோஸ்

காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது. பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும்.

பழங்கள்

பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும்... அதில் என்சைம் அதிகமாக இருக்கு... மேலும் வாயு தொந்தரவை குறைக்கும். இதுபோக, மீன், தயிர், முட்டை ஆகியவற்றையும் அடிக்கடி சாப்பிடலாம்.

மஞ்சள்

மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா... மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா... கடலில் கிடைக்கும் ஒமேகா 3 என்ற வகை மீனில் அதிக சத்துக்கள் இருக்குது. நான் சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும்... நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும்... ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!

பூண்டு

அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா...வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம்... வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். ஆனா ஒண்ணே ஒண்ணு... ராத்திரியில் பூண்டு சாப்பிட்டுட்டு கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது.

நல்ல பசி எடுக்க..

நல்ல பசி எடுக்க...
ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.

பித்தம் போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சப்பழ இலையை காயவைத்து அதனுடன் மிளகாய், உப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு எண்ணெயில் வறுத்து, பொடி செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.

லேசான இரும்புக்காயம் பட்டவர்கள் வரமிளகாயை அரைத்து வேப்பெண்ணெய் சேர்த்து வதக்கி சூடான நிலையில் காயம்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து, பின் சிறு அளவு மிளகாயை அதிலேயே வைத்து கட்ட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தால் காயம் ஆறும்.

மூக்கினுள் என்ன காரணத்தால் ரத்தம் வடிய நேர்ந்தாலும், படிகாரத்தைத் தூள் செய்து, தண்ணீரில் கரைத்து மூக்கின் உள்ளும், புறமும் நன்றாகத் தடவினால் ரத்தக் கசிவு நின்றுவிடும்.

நீர் கடுப்பு நீங்க...

நீர் கடுப்பு நீங்க...
இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் காரம், புளி, உப்புச் சுவை, புலால் உணவு, பட்டை, சோம்பு கரம் மசாலாவின் கலவை, டீ, காபி, புகைபிடிப்பது, மது அருந்துதல், அதிகக் கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும். பறங்கிக் காய் விதை 4-8 வரையில் எடுத்துக் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீரக அழற்சி தணியும். இளம் பிஞ்சுப் பாக்கை உலர்த்திக் தூளாக்கிச் சர்க்கரை சம அளவு சேர்த்து 1 கிராம் அளவு சாப்பிட அஜீர்ணப் பேதி, சிறுநீரக அழற்சி, வயிற்று அழற்சி நீங்கும். மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும். விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டிப் போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிவு, சிறுநீர் எரிச்சல் நீங்கி உற்சாகம், மனத்தெளிவு பிறக்கும். வாழைத் தண்டின் நீரைப்பருக நீர்ச்சுருக்கு, நீர்க் கல்லடைப்பு சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். கீரை வகைகளில் பசளைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்ல உணவு. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மற்றும் புதினாக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை. ஜவ்வரிசி - கஞ்சி, கூழ் பாயசம், வடாம் போன்றவை பல வகைகளில் நமக்கு பயன்படும். நீர்த்தாரை, குடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கு உள்ளவருக்கு ஏற்ற உணவு. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும். வால் மிளகைப் பசுவின் பாலில் ஊறவைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த் துவார வேக்காளம் குறையும்.

சளித் தொல்லை நீங்க கற்பூரவள்ளி

சளித் தொல்லை நீங்க கற்பூரவள்ளி
சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் கற்பூரவள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி பார்ப்போமா!

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

சளித் தொல்லை நீங்க

மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

உடல் சூடு தணிய பரங்கிக்காய்

உடல் சூடு தணிய பரங்கிக்காய்
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இஞ்சியின் மகத்துவம்...

இஞ்சியின் மகத்துவம்...
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

அம்மைநோயைத் தடுக்க!

அம்மைநோயைத் தடுக்க!
அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும், மேலும் பல நோய்கள் வரும் முன் தடுக்கவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அம்மைநோயைத் தடுக்க:

ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அம்மைநோய் வேகத்தை தணிக்க:

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும். தினம் சந்தனச் சோப்பு போடவும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

நரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்:

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப் புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆருடம் கூறுகிறது.

உஷ்ணத்தைத் தணிக்கும் அகத்திக்கீரை:

அகத்திக்கீரை உள்ளே இருக்கும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வுப் பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை தின்றால் விரைவில் குணமாகும்.

அஜீரணசக்திக்கு:

சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி சேர்த்து தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அரைக்கருப்பன் சரியாக:

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அதை நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும். பப்பாளிப்பழச்சாறும் பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்துப் பூசினாலும் குணமாகிவிடும்.

ஆசனவாசல் குடைச்சலுக்கு:

இப்படியான அரிப்புக்குக் காரணம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்நோய் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும். அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும். கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.

ஆரோக்கியத்திற்கு:

தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்­ரும், கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

ஆண்மை வலுப்பெற:

அரசம்பழத்தை பாலில்போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும். தளர்ச்சி நீங்கும். ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும். இலுப்பைப்பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

வயிற்றுப் போக்கா? கொய்யா இலை சாப்பிடுங்க!

வயிற்றுப் போக்கா? கொய்யா இலை சாப்பிடுங்க!
கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது.  வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........

* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

இரும்புச்சத்துள்ள நெல்லிக்காய்...

இரும்புச்சத்துள்ள நெல்லிக்காய்...
உடல் இளமையைத் தக்கவெச்சு, முதுமையைத் தள்ளிப் போடுற அபூர்வக் கனி.. அவ்வைக்கு அதியமான் கொடுத்த இந்த நெல்லிக்கனி! அபரிமிதமான இரும்புச் சத்தைத் தனக்குள்ள வெச்சிருக்கற இந்த நெல்லிக்காய், பெண்களோட கருப்பை கோளாறுகள் பலவற்றையும் நீக்கக்கூடியது.

நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோட சேர்த்து, உடம்புல பூசிக் குளிச்சா, சரும வியாதிகள் ஓடியே போய்விடும். பெரிய நெல்லிக்காயோட சதைப் பகுதியோட தேன், ரோஜா இதழ்கள், கல்கண்டு சேர்த்து குல்கந்து பண்ணிச் சாப்பிட்டா, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கூடுதல் இரும்புச்சத்து தடையில்லாம கிடைக்கும்.

நெல்லிக்காய்ல மட்டும் இல்ல.... அருநெல்லிக்காய்லயும் இதே மருத்துவ குணங்கள் உண்டு.

அருநெல்லிக்காய் ரசம்:

வாணலியில ஒரு கைப்பிடியளவு அருநெல்லிக்காய் போட்டு, ரெண்டு டம்ளர் தண்ணியை ஊத்தி வேகவையுங்க. பிறகு அதை நல்லா மசிச்சு, கொட்டையை நீக்கிட்டு, அதோட ஆறு பச்சை மிளகாய், சிட்டிகை மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு, ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க. கால் கப் துவரம்பருப்பை வேக வெச்சு, நீர்க்கக் கரைச்சு, நெல்லிக்காய் ரசத்துல கொட்டி, நுரைச்சு வந்ததும் இறக்கிடுங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில கொஞ்சம் கடுகு, ரெண்டு மிளகாய்ப் பழம் தாளிச்சுக் கொட்டி, கைப்பிடி கொத்துமல்லித் தழையை பொடியா நறுக்கி, ரசத்துல தூவுங்க. டேஸ்ட் அப்பிடியே எலுமிச்சை ரசம் மாதிரியே இருக்கும்.

இதுல நெல்லிக்காய்க்குப் பதிலா, மாதுளை முத்துக்களைப் போட்டு மாதுளை ரசமும் வைக்கலாம். வாசனையும் ருசியுமா ஜமாய்க்கற இந்த ரசம், வயித்துக் கோளாறுகளுக்கு அருமருந்து!

குழந்தை தூக்கத்துல பல்லை நறநறனு கடிக்கறதா? வயித்துல பூச்சி இருக்கறதுதான் பிரச்னை! அதுக்குத்தான் அந்தக் காலத்துலயெல்லாம் மாசம் ஒருவாட்டி காலையில வெறும் வயித்துல குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்து தின்னக் கொடுப்பார்கள். துளிர் வேப்பிலையை மையா அரைச்சு உருட்டி, உள்நாக்குல போட்டு, கூடவே அரை கரண்டி தயிரை குடிக்க வச்சா கசப்பு ருசி தெரியாது! பூச்சி அவ்வளவும் மலத்துல வெளியேறிடும்.

ஒரு வயசுக்குட்பட்ட குழந்தையா இருந்தா, வேப்பெண்ணெயை இங்க் ஃபில்லர்ல எடுத்து, குழந்தையோட ஆசன வாய்க்குள்ள சில சொட்டு விடலாம். மறுநாளே எல்லாப் பூச்சியும் வெளியேறிடும்.

மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?

மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?
இலுப்பைப் பூ:

இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம்பூ:

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ:

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ:

நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ:

மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

தாழம்பூ:

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ:

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ:

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

மல்லிகைப்பூ:

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பைபூ:

இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

மருதாணியின் மகத்துவம்...

மருதாணியின் மகத்துவம்...
சொறி, சிரங்கு, அரிப்புனு சில பேர் படாத பாடு படுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு சில வைத்தியங்களைச் சொல்றேன் கேட்டுக்கோங்க.

இதைப் படிச்சு முடிச்சதும், "அட ஏற்கெனவே இதே நோய்களுக்கு வேற வேற வைத்தியம் சொல்லியிருந்தாங்களே"னு நினைக்கத் தோணும். அது ஒரு வகை வைத்தியம்... இது ஒரு வகை வைத்தியம். அவ்வளவுதான்.

பூவரசு மரம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மரத்துல புல்லுருவினு ஒரு கொடி வளரும். அந்தக் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கங்க. அதோட சின்னதா ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து மையா அரைச்சிக்கோங்க. எந்தெந்த இடத்துல ஊறல், சொறி, சிரங்கு இருக்கோ அங்கெல்லாம் அதைப் பூசணும். மூணு மணி நேரம் கழிச்சு குளிச்சிரலாம்.

பூவரசம் பூ இல்லைனா... பூவரசம் காய் எடுத்துக்கோங்க (ரெண்டையும் சேர்த்தும் அரைக்கலாம்). அதோட மஞ்சள் துண்டு சேர்த்து அரைச்சு, சிரங்கு உள்ள இடமெல்லாம் பூசிரணும். மூணு மணி நேரம் கழிச்சு, பாசிப்பயறு மாவு தேய்ச்சி குளிக்கணும்.

மேலே சொன்ன ரெண்டு வைத்தியத்தையும், ஒரு மண்டலத்துக்குக் கடைபிடிச்சா... நல்ல குணம் கிடைக்கும்.

கொன்றை மலர் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல மயில் கொன்றைனு ஒரு வகை இருக்கு. அதோட இலையை கோலிக்குண்டு அளவு எடுத்து அரைச்சு பால்ல கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா... எந்த மாதிரி தோல் நோயும் விட்டேனா பாருன்னு ஓடிப்போயிரும் போங்க.

மழைக்காலத்துல தண்ணியில அங்க இங்கனு அலையுறதுனால கால் இடுக்குல சேத்துப்புண் வந்து படாதபாடுபடுத்தும். இதுக்கு கைகண்ட மருந்து இருக்கு. மருதாணி இலைய பறிச்சு கொஞ்சம் தண்ணி விட்டு மையா அரைச்சு சேத்துப்புண் உள்ள எடத்துல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் பூசணும். சில மணி நேரம் கழிச்சு கழுவிரணும்.

இதேமாதிரி பீர்க்கன்கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்து கசக்கி, ஒரு ஸ்பூன்சாறு எடுத்து புளியங்கொட்டை அளவு கல் சுண்ணாம்புச் சேர்த்து சேத்துப்புண் உள்ள எடத்துல பூசணும்.

மேல சொன்ன ரெண்டு வைத்தியத்தையும் ரெண்டு மூணு நாள் செஞ்சாலே குணம் கிடைக்கும்.

ஜீரண சக்தியை எளிதாக்கும் கீரைகள்!

ஜீரண சக்தியை எளிதாக்கும் கீரைகள்!
பொதுவாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருட்களை இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என ஐந்து வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் எளிதாகவும் விரைவிலும் ஜீரணம் ஆகக்கூடியவை கீரைகளே. பூ, காய், தண்டு, கிழங்கு போன்றவை தாமதமாக ஜீரணமாகக் கூடியவை.

தினமும் உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது. இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் ஜீரண சக்தி குறைவதால் அவை சரியாகச் செரிக்காமல் இருக்கின்றன. இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.

கீரை, கறிகாய்களைப் பொடிப் பொடியாக நறுக்கி, நீர் சேர்த்து வேகவைத்து, பிழிந்து நீரை அகற்றி, எண்ணெய், கடுகு பெருங்காயம், மிளகு, இஞ்சி, புளிப்பு மாதுளை இவற்றை சேர்த்து சுண்டவைத்து சாப்பிட்டால் கேடு விளைவிக்காது. வயிற்றில் மல அடைச்சலை ஏற்படுத்தாது சுவையூட்டும்.

தேமல் குணமாக....

தேமல் குணமாக....
உடலில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளையும் உபாதைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமல், அஜாக்கிரதையாக இருந்து விட்டால், மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே, சரியான முறையில் உடலை பேணி வந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளை சில.....

தலைமுடி கருமையாக வளர:

சிலருக்கு இளவயது நரை, முடி செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவை உண்டாகும்.

எள்ளுச் செடியின் இலைகள், வேர் ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் அலசி வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். தலைமுடியும் கருமையாக நீண்டு வளரும்.

கண் சிவப்பு மாற:

சிலருக்கு உஷ்ணம் அதிகமாவதால் கண்களில் மேல் கட்டி மற்றும் கண்விழிகள் சிவந்துபோதல் போன்றவை உண்டாகும். இவர்கள் நாமக்கட்டியை தண்­ணீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்று போட்டால் கண் கட்டி மற்றும் கண் சிவப்பு மாறும்.

தேமல் வந்து தடிச்சிப் போச்சா....

பழுத்த பூவரசு இலை, வேப்பங் கொழுந்து, பொன்னாவரைப் பூ, குப்பைமேனி இலை, இலவம் இலை (இலவம் பஞ்சு மர இலை) கார்போக அரிசி, கருஞ்சீரகம் இதையெல்லாம் சம அளவு எடுத்து ஒண்ணாச் சேர்த்து அரைத்து தேமல் இருக்குற இடத்துல தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கணும்.

இன்னொரு வைத்தியம்:

முட்டையோட வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.

கபம் அதிகமா இருக்குற உடம்புக்குத்தான் தேமல் வரும். கபம் அதிகமாக இருந்தாலே தோல் தடிச்சுப் போகும். மலச்சிக்கல், தூக்கமில்லாம இருக்கிறது இப்படி பல காரணத்துனால இந்த தேமல் வரும்.

வாதத்தைத் தணிக்க...

வாதத்தைத் தணிக்க...


ரத்த சோகை உள்ள, எப்போதும் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்பவர்களுக்கு பலம் தரும் உணவு - வெல்லம்! இவர்கள் பால், டீ, வேறு இனிப்புகள் சாப்பிடும்போது அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை விட வெல்லத்துக்கு மருத்துவ குணங்கள் அதிகம். அதிலும் ஒரு வருடம் பழசான வெல்லம் கூடுதல் பலம் தரும்.

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும்.

ஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் [பாகம் 1]

ஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் [பாகம் 1]
* உஷ்ணத்தாலே வயிறு வலிச்சு "நச்சு, நச்சு"னு பேதியாகிறதா? எட்டு மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு கல்லு உப்பு, மூன்றையுமே பொடி பண்ணி, சுடச்சுட சாதத்தின் மேல் போட்டு, பொரிய, பொரிய ஒரு ஸ்பூன் நெய்யைக் காய்ச்சி, அதன் மேல் விட்டுப் பிசைந்து, மூன்று கவளங்கள் சாப்பிட்டால் உஷ்ணபேதி உடனே நின்று விடும்.

* சிலருக்கு வெயிலில் வெளியே போய் விட்டு வந்தால் கண்களை இருட்டிக் கொண்டு தலை சுற்றி பூமியே தட்டாமாலை ஆடுவது போல் இருக்கும். இதற்கு கொட்டைப் புளி, ஒரு துண்டு வெல்லம், ஒரு ஸ்பூன் சீரகம் மூன்றையும் ஒன்றாக நசுக்கி, உருட்டி, வாயில் அடக்கிக் கொண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். தலையணை கூடாது. இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும்.

* அட, சூடு அதிகமாகி, கண்ணிலிருந்து நீர் வருகிறதா? கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறதா? ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு சின்ன வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து, கண் இமைகள் மீது ஒற்றி, ஒற்றி எடுங்கள். இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாகத் தெரிவதோடு வலியும் இருக்காது.